Friday, March 26, 2010

வேலூர் ஜெயிலிலே

பேசவும் கூடுது பெருங் கூட்டம் கூடுது
பிறகென்ன நீங்களும் சாமியாராகலாம்
வாசனைத் திரவியம் அத்தர் ஜவ்வாதெல்லாம்
வாங்கியே தந்திட நாங்களும் இருக்கோம்ல்லா
யோசனை பண்ணாம சரிடான்னு சொல்லிட்டா
யோகம் தான் நாங்களும் வாழுவோம் கொஞ்ச நா(ள்)
தாசரா நாங்களும் கூடவே இருப்போமே
தயங்காமச் சொல்லுங்க என்னங்க அண்ணாச்சி


கண்ணானந்தா என்றுங்க பெயரையும் மாத்தலாம்
கருவறைத் திருவறைக் கழிவறை கட்டலாம்
பெண்ணார்கள் வந்தாலோ சோதிச்சே அனுப்புவோம்
பிறகென்ன அதுக்குத்தான் அடியவர் வேஷமே
சொன்னாத்தான் கேளுங்க கேளுங்க அண்ணாச்சி
சொர்க்கத்தை மண்ணிலே காணலாம் அண்ணாச்சி
விண்ணானம் பேசாம சரின்னு தான் சொல்லுங்க
வேலூர் ஜெயிலிலே வேண்டிய ஆளுண்டு

0 மறுமொழிகள்: