Sunday, March 7, 2010

அழுகின்றார்

எழுதி விட்டால் எழுத்தாகும் என்று இங்கே
இருப்பவர்கள் சில பேர்கள் கருதுகின்றார்
பழுதாக எழுதுகின்றார் பணம் இருக்க
பள பளக்கும் புத்தகமாய் ஆக்குகின்றார்
தொழு ததனை அன்பளிப்பாய் நம்மிடத்தில்
துணிவோடு தருகின்றார் படிக்கச் சொல்லி
அழுகின்றார் தங்களது படைப்புக்களை
அச்சிடவே முடியாத அறிஞர் பல்லோர்

0 மறுமொழிகள்: