Monday, March 22, 2010

அருணா சாய்ராம் வாழ்க

சோமுவைப் போல் உறரிதாஸ் கிரி ஸ்வாமியைப் போல்
சொக்க வைக்கும் இசையதனைத் தருவதற்கு
நாமறிய யார் உள்ளார் என்று நாமும்
நாயகனாம் நம்மிறையை வேண்டி நின்றோம்
தாமளித்த அக்கொடையை இறைவன் காட்ட
தாளமிட்டு நாம் மகிழ்ந்தோம் அருணா சாய்ராம்
பூ மணக்கும் இசைக்கவரே சொந்தம் இந்தப்
பூமியெல்லாம் அவர் இசைக்குச் சொந்தம் வாழ்க

1 மறுமொழிகள்:

said...

உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.திரு சுப்புடு அவர்கள், அருணா அம்மாவை ஆண் சுப்புடு எனப் புகழ்ந்தவர்.பல பிரான்சியர் அவர் ரசிகர்கள்.