Tuesday, March 9, 2010

இறைவனையே வணங்கி வெல்லும்

மருத்துவர்கள் குறிக்கின்ற நேரம் தன்னில்
மகவு வந்து பிறப்பதில்லை- மரணம் என்னும்
பெருத்த அந்த முடிவதுவும் மனிதர்கள் தாம்
பேரறிவால் அறிவதற்கு முடிவதில்லை
கருத்ததனை உணர்ந்தீரோ என்து மக்காள்
கடவுள் அவன் கையினிலே இரண்டும் உண்டு
பொருத்தமற்ற உம் அறிவைத் தூக்கிப் போட்டு
புகழ்க்கெல்லாம் இறைவனையே வணங்கி வெல்லும்

0 மறுமொழிகள்: