Sunday, March 7, 2010

தேம்புகின்றார்

கற்றவர்க்கு முன்னாலே அடக்கம் காட்டார்
கல்லாத மூடர்களும் என்று அன்றே
உற்றவராம் வள்ளுவரும் உணர்த்திச் சென்றார்
உணராதார் கல்லாதார் மேலும் மேலும்
கொற்றவன் போல் ஆடுகின்றார் தங்களையே
கொலு மண்டபத்தில் வைக்க முயலுகின்றார்
பற்றற்ற கற்றவரோ அவர்களையே
பரிதாபம் என்றுணர்ந்து தேம்புகின்றார்

0 மறுமொழிகள்: