Sunday, March 7, 2010

சம்காரம் செய்ய வேண்டும்

ஆசையுடன் எழுதுகின்றார் தவறில்லையே
அறிஞர்களில் சில பேரும் வினவுகின்றார்
ஓசையின்றி அவரோடு வைத்துக் கொண்டால்
ஒருவருக்கும் துன்பமில்லை வம்பும் இல்லை
பூசையிலே வைப்பதற்கு ஏற்றாற் போல
புனை கதையும் பொய் புரட்டும் செய்வாரென்றால்
நீசர்களை ஒழிப்பதற்குத் தமிழாம் தாயார்
நேர் வந்து சம்காரம் செய்ய வேண்டும்

0 மறுமொழிகள்: