Tuesday, March 23, 2010

எங்கு சென்றீர்

தனி நபர் அறைக்குள்ளே படமதைப் பிடித்தது
தவறென்று சொல்கின்றார் படித்த சில்லோர்
மனிதரை ஏமாற்றி மதமதைத் தேராக்கி
மனம் போல வாழ்ந்தாரை என்ன செய்ய
தனி நபரில்லையே சமுதாயத் தொல்லையே
தவ வேடம் பூண்ட அக் கேடு கெட்டார்
வழி இன்றி உடல் விற்கும் வறுமையின் பெண்களின்
வண்ணப் படம் வருகையில் எங்கு சென்றீர்

0 மறுமொழிகள்: