Monday, March 8, 2010

பண்பு வழி

பணம் கொண்டார் தமைத் தேடி அவர்களது
பக்கத்தில் எப்போதும் இருந்து கொண்டு
குணம் கொண்ட அறிஞரையும் அவமதிக்கும்
குற்றத்தார் கவிஞரென சொல்லிக் கொள்வார்
நிணம் தசை நார் அனைத்திலுமே என்றும் எங்கும்
நீதியையே கொண்டு இங்கு அன்பால் வாழும்
குணம் கொண்ட பெரியவரோ அவர்க்கும் கூட
குளிர் முகம் தான் காட்டிடுவார் பண்பு வழி

0 மறுமொழிகள்: