Thursday, March 25, 2010

ஒழிப்பார் யாரோ

போலியான மருந்துகளை விற்போர் தம்மை
பொறுப்பிலுள்ள பெரியவர்கள் கண்டு விட்டார்
நாளிதழ்கள் தோறும் பெருஞ் செய்தியிது
நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்றார்
காலிகளும் கூலிகளும் கொண்டு இங்கு
கண்ணியமே இல்லாமல் மிரட்டும் அந்தப்
போலிகளை மட்டும் மிகப் பெரும் பொறுப்பில்
போற்றி வைக்கும் கொடுமையினை ஒழிப்பார் யாரோ

1 மறுமொழிகள்:

said...

காசு தான் உலகம் என்றிருப்போரே
கயமை தனம் செய்கிறார்கள்
தூசு இந்த உயிர்கள் என்போர்
துஷ்டத்தனம் செய்கிறார்கள்.