Tuesday, March 9, 2010

ஏன் அளித்தான்

கடவுள் இல்லை என்று சொல்லி மேடை தோறும்
கனல் தெறிக்கப் பேசுகின்றார் கர்ஜிக்கின்றார்
புடவையுடன் இவர் மனைவி கோயிலுக்குப்
போகின்றார் அம்பாளின் அருளைப் பெற
விடலை போட்டு விநாயகரைத் தரிசிக்கின்றார்
வேல் முருகன் கால்களையே பற்றுகின்றார்
நடிகர் இவர் தனைக் கூட மனிதர் போல
நாயகனாம் இறைவன் அவன் ஏன் அளித்தான்

0 மறுமொழிகள்: