Tuesday, March 16, 2010

ஒழித்து அருளவில்லை

எல்லாமே எழுதி நின்றேன் இருந்த போதும்
ஏக்கந்தான் மிஞ்சியது எனக்கு இங்கு
பொல்லார்கள் வாழுகின்றார் மிகப் பெரிய
பொறுப்புக்கள் தம் வசத்தில் கொண்டாராகி
நல்லார்கள் வாழுகின்றார் வாய் திறக்க
நாணமுற்று நாணமுற்று நாட்டைக் கண்டு
எல்லாம் உணர்ந்த அந்த இறைவன் மட்டும்
ஏன் இன்னும் இவர் ஒழித்து அருளவில்லை

0 மறுமொழிகள்: