Sunday, March 7, 2010

எத்தும் நல்லோர்

எல்லார்க்கும் நல்லவராய்க் காட்டிக் கொள்ளல்
ஏய்ப்பதிலே மிகச் சிறந்த வழியேயாகும்
பொல்லார்க்கும் புன் சிரிப்பு நல் வணக்கம்
பொறுமை கொண்ட பெருமை என்ற நல் நடிப்பு
வல்லார்க்கோ பெரும் வணக்கம் வாழ்த்துச் சொல்லல்
வாய் நிறைந்த பெரும் சிரிப்பு நெருக்கம் காட்டல்
கல்லார்க்கும் அறிஞர் என்ற பட்டம் தரல்
கணக்கிட்டு வாழுகின்றார் எத்தும் நல்லோர்

0 மறுமொழிகள்: