Wednesday, March 24, 2010

பெரியவர் தி.க.சி. அவர்களின் நன்றி மடலுக்குப் பதில்

புதியவர்கள் புறப்பட்டார் என்ற போதே
போற்றுகின்ற பாங்கு உங்கள் சிறந்த பாங்கு
தெரிந்தவர்கள் தெரியாதார் என்று இல்லை
தீந்தமிழர் என்றாலே போதும் போதும்
முதியவரே மிகச் சிறந்த முத்தமிழில்
முயல்வார்கள் அனைவருக்கும் நீங்கள் தந்தை
கதியாகச் சில பேரே தமிழில் உள்ளார் அந்தக்
கணக்கெடுப்பில் என்றைக்கும் முதல்வர் தாங்கள்


எல்லோரும் உயர வேண்டும் என்ற எண்ணம்
எத்தனை பேர் கொண்டுள்ளார் இந்த நாட்டில்
வல்லார்கள் தனை மட்டும் வாழ்த்தி வாழ்த்தி
வகை தொகையாய் வாழ்கின்றார் சில பேர் இங்கு
நல்லோரே நான் அறிய நீங்கள் மட்டும்
நலம் விரும்பியாய் உள்ளீர் அனைவருக்கும்
சொல்லாமல் விட்டால் நான் துரோகியாவேன்
சுந்தரத்துத் தமிழன்னை சொல்லச் சொன்னேன்

1 மறுமொழிகள்:

said...

உண்மை
வார்த்தைக்கு வார்த்தை வழி மொழிகிறேன்