Tuesday, March 9, 2010

இன்ஷா அல்லா

நாளைக்குச் சந்திப்போம் என்று சொன்னால்
நாயகனாம் அல்லாவின் அருளிருந்தால்
போய் வாரும் என்று சொல்வார் இன்ஷா அல்லா
பொறுப்புடனே சொல்லி நிற்பார் இறைவன் அன்றே
நீர் வாழும் வாழ்க்கையினை முடித்து விட்டால்
நினைத்த படி யாரை எங்கு காண்பீர் நீரும்
ஊர் தோறும் மேடை தோறும் சொல்லுகின்றேன்
உயர் விதனை இறை அருளை இன்ஷா அல்லா

0 மறுமொழிகள்: