Saturday, June 7, 2008

தரம்

கோயில் யானை ஆற்றினிலே குளித்து விட்டு
குதூகலமாய்க் கோயில் நோக்கி நடக்கிறது
ஆய் தின்று சாக்கடையில் புரண்ட பன்றி
அங்கெதிரே வால் சுழட்டி வருகின்றது
தூய்மையுடன் கோயில் செல்லும் யானை உடன்
துடித்தபடி ஒதுங்கி மெல்ல நடக்கிறது
ஆய்ப் பன்றி மனத்திற்குள் மகிழ்கின்றது
யானை தனக்காக அஞ்சிச் செல்வதாக

0 மறுமொழிகள்: